search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "காப்பாற்ற முயற்சி"

    கோவில் குளத்தில் குளித்த போது தண்ணீரில் மூழ்கி கோவை வாலிபர் பரிதாபமாக உயிரிழந்தார். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

    கொழிஞ்சாம்பாறை:

    கோவை கணபதி கே.கே. நகரை சேர்ந்த சாமி- கவிதா தம்பதியின் மகன் பரத் (வயது 19). இவரது தம்பி தினேஷ். இவர்களது நண்பர்கள் சந்தோஷ் (18), சக்தி (19). இவர்கள் 4 பேரும் கேரள மாநிலம் பாலக்காடு மாவட்டம் நெம்மாறையில் உள்ள உறவினர் வீட்டுக்கு விருந்துக்கு சென்றனர்.

    நேற்று மாலை நெம்மாறை நெல்லிககுளக்கரை பகவதியம்மன் கோவில் குளத்தில் குளிக்க சென்றனர். குளத்தில் திடீரென நண்பர் சக்தி ஆழமான பகுதியில் சிக்கி அலறினார்.

    அதிர்ச்சியடைந்த பரத் நண்பரை காப்பாற்ற குளத்தில் குதித்தார். ஆனால் சக்தி தண்ணீரில் இருந்து தப்பி கரையேறினார். அவரை காப்பாற்ற குதித்த பரத் குளத்தில் மூழ்கினார்.

    கரையில் இருந்த மற்ற 3 பேரும் நெம்மாறை போலீஸ் மற்றும் தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். போலீசார் அங்கு வந்து பரத்தை தேடினர். சிறிது நேரத்தில் மயங்கிய நிலையில் அவரை மீட்டனர்.

    உடனே பரத்தை நெம்மாறை அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதனை செய்த டாக்டர் வரும் வழியில் பரத் இறந்து விட்டதாக கூறினார்.

    இது குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    ×